Showing posts with label ஒரு கேள்வி. Show all posts
Showing posts with label ஒரு கேள்வி. Show all posts

Tuesday, December 21, 2010

மதமாற போகிறவர்களிடம் ஒரே ஒரு கேள்வி

 கடைசியாக கிறிஸ்த்துவ மதத்திற்கு மாற நினைப்பவர்களுக்கு ஒர் செய்தி,  ஒரு சமயம் இயேசுநாதரிடம் உங்கள் உபதேசம் எல்லோருக்கு மானதா?  யூதர்களுக்கு மட்டுமானதா?  என்று கேட்டதற்கு அவர் கையில் இருக்கும் ஒரே ஒரு ரொட்டி துண்டு பசியால் அழுகின்ற உன் குழந்தைக்கா?  அல்லது உன் வீட்டு நாய்க்கா?  என்று திருப்பி கேட்டார்.  இதற்கு உண்மையான அர்த்தம் எனது உபதேசம் இஸ்ரேலியர்களுக்கு மட்டும்தான்.  என்பதாகும்.  இப்போது நாம் மதமாறபோகிறவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விருப்புகிறோம்.  நீங்கள் இந்தியர்களா?  இஸ்ரேலியர்களா?
-----------


வட மாநிலங்களில் உள்ள காடுகளில் உள்ள ஆதிவாசிகளிடம்,

கிறிஸ்த்தவர்கள்,வேன், ஜீப்,கார் போன்ற வாகனங்களை கொண்டு 

வந்து நிறுத்தி அதை ஸ்டார்ட் செய்ய முடியாமல் 

அங்குள்ள ஆதிவாசிகளிடம் நடித்து முதலில் அவர்களின் அனுதாபத்தை,

பெறுகிறார்கள்.பின்பு ஹிந்து கடவுள்களின் பெயரை சொல்லி வாகனத்தை 

தள்ள சொல்கிறார்கள்.வாகனமும் ஸ்டார்ட் ஆவதில்லை.காரணம்,சாவியை அவர்கள் 

போடாமலே இருப்பதனால்தான்.இப்படி பல முறை செய்து ஆதிவாசிகளை சலிப்படைய 

வைக்கிறார்கள்.பின்பு,இயேசுவின் பெயரால் வாகனத்தை தள்ளச் சொல்கிறார்கள்.

அப்படி அவர்கள் , தள்ளும் போது சாவியை போட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்து ,

ஏசுவுக்கு மட்டுமே சக்தி இருப்பது போல் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள்.அதனால் ,

அந்த ஆதிவாசிகளிடமும் ஒரு சலனத்தை உருவாக்கி மதம் மாற்றும் முயற்ச்சியில்

வெற்றி பெறுகிறார்கள். இது உண்மை.

Monday, November 2, 2009

ஹிந்து மதத்தின் எதிரி சாதி வேறுபாடுதான்!

ஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த அதிகாரிகள் 1947-க்கு முன் இந்தியாவில் பணியாற்றியவர்கள். '200 ஆண்டு காளம் பாரதத்தை எப்படி ஆண்டீர்கள்' என்று அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பாரதத்தில் பல இந்துக்கள் அடிமைத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள். இதுவே எங்கள் ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இப்படிப் பட்டவர்கள் இருக்கும்போது பாரதத்தை அடிமைப் படுத்தவோ தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கவோ நாங்கள் சிரமப்பட வேண்டியதில்லை' என்றனர்.



ஆங்கிலேய அதிகாரிகள் சொன்ன இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேசிய சக்திகள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் சமமானவர்கள்; சம உரிமையுடைய குடிமக்கள். இது உறுதிப்படாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். ஹிந்துக்களில் ஒரு பகுதியினர் இரண்டாந்தர குடிமக்கள் என்றால் அதற்குக் காரணம் ஹிந்துக்களே தவிர வேறு யாருமில்லை.


இந்தக் கேள்விக்கு விடை தேட வேண்டிய பொறுப்பு தேசிய எண்ணம் கொண்டவர்களுக்கு உல்ளது. யாரையும் இகழ்வாக நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தை பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அடிமையாக இருக்க மாட்டோம் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். சம உரிமையுள்ளவர்களாகச் செயல்படும்போதுதான் எழுச்சி மிக்க பாரதத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.





(ஜூன் 16-ம் தேதி டில்லியில் நடை பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறப்பு பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் ஓய்வு பெர்ற I.F.S அதிகாரி ஓ.பி.குப்தா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.)

மதம் மாற்றுவதே மத நம்பிக்கையானால்....

ஒரு

வேண்டுகோள், இதைப் படிக்கும்போது கிறிஸ்த்ஹுவ மத நம்பிக்கைகளை நான்

விமர்சனம் செய்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எந்த கிறிஸ்துவ மத

நம்பிக்கைகள் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களைப் பாதிக்கிறதோ, எந்த

நம்பிக்கைகள் மற்ற மதத்தினருக்கும் கிறிஸ்துவ ஸ்தாபனங்களுக்கும் கிடையே

பிரச்சினைகளை உருவாக்குகின்றனவோ, அவைகளைப் பறித்தான் இங்கு

குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு மதத்திற்கும் நம்பிக்கை மாத்திரம் உண்டு.

ஆனால் அது மற்ற மதங்களைப் பாதிக்கக்கூடாது அவ்வளவுதான்.



ஜெயலலிதா

கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் ஆசை காட்டி, மோசம் செய்து,

மிரட்டி எவரையும் மதமாற்றம் செய்யக்கூடாது என்றுதானே கூறுகிறது. இது எல்லா

மதத்திற்கும் நல்லதுதானே! எப்படி எல்லா மதத்தினரையும் ஒரே மாதிரி

பாதிக்கும் ஒரு சட்டத்தைப் பற்றி, எதிரும் புதிருமான கருத்துகள்

நிலவுகின்றன - அதுவும் ஆன்மீக வாதிகளிடையே அரசியல்வாதிகள் கூட ஒருவர்

ஆதரித்தால், மற்றவர் எதிர்க்கவேண்டும் என்று வேண்டுமென்றே எதிர்க்கலாம்.

ஆனால் கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் ஏன் இந்தச் சட்டத்தை எதிர்க்கவேண்டும்?
இந்த

கேள்விகளுக்கு சரியான விடை வேண்டுமானால், இந்தப் பிரச்சினையைத் தெளிவாக

அலசவேண்டுமானால், ஒரு நிபந்தனை, கிறிஸ்துவ ஸ்தாபனங்களைப் பற்றிப் பொதுவாக

இருக்கும் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்டு - அவர்கள் செய்யும் சேவை என்னும்

போர்வையை நீக்கிவிட்டு - உலக கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களின் ஆதார

நம்பிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால் தான், ஏன் கட்டாய மதமாற்றத்

தடைச்சட்டத்திற்கு நம்நாட்டு கிறிஸ்துவ அமைப்புகள் இவ்வளவு எதிர்ப்பு

தெரிவிக்கின்றன என்பது புரியும்.



மேலும் நடைமுறையில் மாத்திரம்

இல்லாமல், நம்பிக்கை அடிப்படையிலும் கிறிஸ்துவ மதம், ஹிந்து மதத்தை எந்த

கண்ணோட்டத்தோடு பார்க்கிறது, அதற்கு மாறாக ஹிந்து மதம் கிறிஸ்துவ மதத்தை

எப்படிப் பார்க்கிறது - என்பதனையும் பட்டவர்த்தனமாக எடுத்துச்

செல்லவேண்டும். மத மாற்றம் செய்யும் அகில உலக கிறிச்துவ நிறுவனங்கள்

எப்படி செயல்படுகின்றன; அவர்கள் மதத்தை எப்படி வியாபாரப் பொருளாக்கி,

மதங்களின் உறவுகளை சந்தைக் கலாசாரமாக்கி தங்கள் மதத்திற்கு ஆள் சேர்ப்பது

ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள்; எப்படி இந்த

குறிக்கோளுக்கு அவர்கள் எது செய்தாலும் - பள்ளிக்கூடமோ ஆஸ்பத்திரியோ

குஷ்ட ரோக நிவாரணமோ - அது பக்க வாத்யம்தான் என்பது புரியும்.



அது

மாத்திரம் அல்ல, கிறிஸ்துவ ஸ்தாபனங்களுக்கு உலக அளவிலான திட்டங்கள்,

ஒவ்வொரு நாட்டிலுள்ள கிறிஸ்துவ ஸ்தாபனங்களும், உலக கிறிஸ்துவ

ஸ்தாபனங்களின் வரையறையில்தான் இயங்கும். அது தானாக ஒன்றும் செய்யமுடியாது.

இந்தில் எந்தத் தனி நாட்டின் கிறிஸ்துவ நிறுவனங்களுக்கும் சுதந்திரம்

கிடையாது.



எல்லா சர்சுகளும், உலக சர்ச் அமைப்புக்குக் கீழேதான்.

உலக சர்ச்சுகளின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் நம் நாட்டு

சர்ச்சுகள், (ஆர்ச் பிஷப்புகள்) செயல்படுகின்றன. உலக சர்ச்சுகள் மதமாற்றம்

செய்யவேண்டிய கட்டாயத்தினால், சந்தைக் கலாசாரத்தை மதத்துடன்

இணைத்துவிட்டார்கள். இந்த மதச்சந்தை வியாபாரத்தின் தாத்பர்யத்தையும்,

விளைவையும் பற்றித் தனியாக விளக்கி எழுதியிருக்கிறேன். இந்த மத சந்தைக்

கலாசாரத்திற்கு ஆரம்பக் காரணம், மற்ற மதத்தலைவர்களை எப்படியாவது மதம்

மாறாச் செய்து, தன் மதத்தில் சேர்த்துவிட வேண்டுமென்கிற கட்டாய தர்மம்

கிறிஸ்துவ மத நம்பிக்கையில் இருப்பதுதான். இதுதான் இப்போது

மதங்களூக்கிடையே தீவிர போட்டியை உருவாக்கியிருக்கிறது.



இந்தப்

போட்டியை சர்வதேச அளவில் முதலில் ஆரம்பித்து, மிகவும் வெற்றிகரமாக

நடத்திவருவது கிறிஸ்த்ஹுவ மத ஸ்தாபனங்கள். அவர்கள் ஏன் கிறிஸ்துவர்களாக

அல்லாதவர்களை கிறிஸ்துவர்களாக மாற்றுவதை ஒரு தர்மமாக, கடமையாக

நினைக்கிறார்கள்? இதற்கான காரணங்கள் என்ன? இதை அலசிப்பார்த்தால் நம்முடைய

பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். இரண்டு காரணங்களால் பிற

மதத்தவர்களை கிறிஸ்த்ஹுவர்களாக மாற்றவேண்டும் என்கிற கட்டாயம், மத ரீதியாக

கிறிஸ்துவ மத ஸ்தபானங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.



முதல் காரணம்:

கிறிஸ்த்துவ மதத்தின் மாற்ற முடியாத அடிப்படையான நம்பிக்கை, கிறிஸ்துவ

மதம் மாத்திரம்தான் உண்மையான் மதம், அது ஒன்றுதான் வழி; மற்ற மதங்கள்

எல்லாம் பொய்; அவை சாத்தானின் சதி - என்பதுதான்.



கிறிஸ்துவ

மதத்தின் மூலமாக மனிதன் மோட்சம் அடைய முடியும். வேறு மதத்தைப்

பின்பற்றுகிறவர்கள் சாத்தானின் கும்பல்கள். அவர்களுடன் உறவோ, பழக்கமோ

கூடாது. மேலும் இந்த ஒரே உண்மையான மதத்தை உலகம் முழுவதும் பரப்ப,

எல்லோரையும் கிறிஸ்துவர்களாக மாற்ற, கிறிஸ்துவ மதம், கிறிஸ்துவப்

பாதிரிகளுக்குக் கட்டளையிடுகிறது. இந்த அடிப்படையான நம்பிக்கையைக் காரணம்

காட்டித்தான் Encyclopaedia of Britannica என்கிற அறிவுக் களஞ்சியமான

தொகுப்பு, கிறிஸ்துவ மதத்தை 'சகிப்புத் தன்மையில்லாத' மதம் என்று

வர்ணிக்கிறது. 'இந்தத் தொகுப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், இது

கிறிஸ்த்ஹுவ அறிஞர்களால் தொகுக்கப்பட்டது. அதனால், இதுபற்றிக் குற்றம்,

குறை கூற முடியாது.ல் உன்னுடைய மதம் மாத்திரம்தான் உண்மை. மற்றதெல்லாம்

பொய் என்கிற நம்பிக்கை, அந்த உண்மையான மதம் எங்கும் பரவ வேண்டுமென்றால்,

பொய்யான மதங்கள் அழியவேண்டும். இந்த அடிப்படையிலே, கிரேக்க, ரோமானிய

மதங்களிலிருந்து சாமானியமான பழங்குடி மதங்கள், ஐரோப்பா வடக்கு அமெரிக்கா,

தெற்கு அமெரிக்கா, அப்பிரிக்கா போன்ற இடங்களில் அடியோடு அழிக்கப்பட்டன.

இந்த அழிவுகள் பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுகளும், புத்தகங்களும் வந்த

வண்ணம் இருக்கின்றன. இதற்குக் காரணம், மற்ற மதங்களெல்லாம் பயனற்ற மதங்கள்

என்பது கிறிஸ்த்ஹுவ போதகர்களின் நம்பிக்கை. (இந்த அழிவுகள் பற்றி மேலும்

விபரங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் Encyclopedia of

Britannica-வின் 4வது தொகுப்பில் பல இடங்களில் குறிப்பாக பக்கங்கள்

491-492ல் காணலாம்.).


.இரண்டாவது காரணம்: கிறிஸ்துவ மதத்தில் மற்றொரு

நம்பிக்கை இயேசு கிறிஸ்து மீண்டும் உலகுக்கு வருவார், வந்து 1000 ஆண்டுகள்

ஆட்சி செய்வார் என்பது. அதன் பிறகு பிரளயம் வரும். அப்போது

புதைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவர்கள் எல்லாம் உயிர் பெற்று வருவார்கள்,

யார் யார் நல்லது செய்திருக்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்திற்கும்

மற்றவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள். (ஆனால் கிறிஸ்துவர்கள்

அல்லாதவர்கள் நல்லது செய்தாலும் நரகத்திற்குத்தான் செல்வார்கள், இது

காந்திக்கும் பொருந்தும்.) ஆனால் இவ்வளவும் நடக்க, இயேசு கிறிஸ்த்ஹு

உலகிற்கு திரும்பவும் வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யவேண்டும்.

(இதைத்தான் Millennium என்று கூறுகிறார்கள்.)



ஆனால் இயேசு எப்போது

திரும்ப வருவார்? எப்போது உலகம் முழுவதும் பரவி கிறிஸ்துவ மதம் மாத்திரம்

நிலவுகிறதோ அப்போதுதான் திரும்ப வருவார். சாத்தான் நம்பிக்கைகள் உலகின்

எந்தப் பாகத்திலிருந்தாலும் அவை இருக்கும் வரையில் இயேசு கிறிஸ்து திரும்ப

வரமாட்டார் என்பதுதான் அந்த நம்பிக்கை. இந்த நம்பிக்கையை Eschatological

expectation என்று கிறிஸ்துவ மறையில் கூறுவார்கள். இப்போது புரிகிறதா

மதமாற்றம் செய்வதில் கிறிஸ்துவ ஸ்தாபனங்களும் பாதிரிகளும் ஏன்

புரியாததொரு வேகங்காட்டுகிறார்கள் என்று? இயேசுவை உயிருடன்

பார்க்கவேண்டுமென்கிற ஆவல், மற்ற மதத்தவர்கள் எல்லோரையும்

கிறிஸ்துவர்களாக மாற்ற வேண்டும் என்கிற கட்டாயமாக மாறி, அதுவே மதமாற்ற

வெறியாக உருவெடுக்கிறது.



இந்த Eschatological நம்பிக்கை, கிறிஸ்துவ

மதத்தை, மதமாற்றத்தின் மூலமாக, காட்டுத் தீ போல உலகில் எப்படி பரவ

வைத்தது என்பது, அதே Encyclopaediaவில் விவரமாக எழுதப்பட்டுள்ளது.

சொல்லப்போனால் மற்ற மதங்கள் எல்லாம் இயேசு உலகில் வருவதற்குத்

தடங்கல்கள் என்கிறா Eschatological நம்பிக்கைதான் கட்டாய மதமாற்றத்திற்கு

உந்துதலாக இருக்கிறது. எப்படி இந்த Eschatological நம்பிக்கை, வெறியாக

மாறி, கிறிஸ்துவ மதம் பரவ உதவியிருக்கிறது என்பதைக் காட்ட Encyclopaedia

தொகுப்பில் கூறப்பட்டுள்ள சரித்திர பூர்வமான ஒரு நிகழ்ச்சியை - அதுவும்

நம் நாடு சம்பந்தப்பட்டது - இங்கு நினைவு கூரலாம் என நினைக்கிறேன்.



கொலம்பஸ்

அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று வெள்ளைக்காரர்கள் நமக்கு எழுதி

வைத்ததை, இதுவரை வரலாற்றுப் புத்தகத்தில் நாம்படித்து வருகிறோம். ஆனால்,

கொலம்பஸ் அமெரிக்காவைத் தேடிப் போகவில்லை. கப்பலில் ஏறிய அவர் பாரத

நாட்டுக்குச் செல்லவேண்டுமென்றுதான் புறப்பட்டார். ஏன் அவர் பாரத

நாட்டுக்குப் புறப்பட்டார்? இயேசு கிறிஸ்து உலகுக்கு மறுபடியும் வரவேண்டிய

தருணம் வந்துவிட்டதாக கொலம்பஸ் நம்பினார். ஆனால் ஒரு தடங்கல் இருப்பதால்,

இயேசு வரமுடியவில்லை என்றும வர் நம்பினார். அது என்ன தடங்கல்? பாரத

நாட்டில் சாத்தான் (ஹிந்து மதம்) குடி கொண்டு, இயேசு வருகையைத் தடுத்துக்

கொண்டிருக்கிறது என்பதுதான். அதனால் எப்படியாவது (வாஸ்கோடகாமா சென்ற

நீண்ட வழியில் செல்ல நேரமில்லாததால்) ஒரு குறுக்கு வழியில் பாரத தேசம்

சென்று, இயேசு வருவதற்கு தடங்கலாக இருக்கிற சாதாரண ஹிந்து மதத்தை,

கிறிஸ்துவ வழிமுறைகளால் விலக்கிவிடவேண்டும் என்கிற வெறியிலேதான், அவர்

பாரதநாடு செல்லக் கீளம்பி, அமெரிக்காவில் போய் இறங்கினார். (இது

பற்றிEncyclopacdia-வில் தொகுப்பு 4-இல் பக்கம் 504-இல்

குறிப்பிடப்பட்டுள்ளது.)



அதையே இந்தியா என்று நம்பி, அங்கிருக்கும்

மக்களை இந்தியர்கள் என்று நினைத்து, அவர்களை மிருகங்களை வேட்டையாடுவது

போல தீர்த்துக்கட்டினார். அப்போது கிறிஸ்துவ நிறுவனங்கள் இந்த

வழிமுறையைக் கையாண்டனர். அவர் துவக்கி வைத்த இந்தப் பணி 2 நூற்றாண்டுகளிலே

பூர்த்தியடைந்து வடக்கு, தெற்கு அமெரிக்காவிலிருந்தே, பழங்குடியினர்

முழுமையாக தீர்த்துக்கட்டப்பட்டனர். கிட்டத்தட்ட 11கோடி பேரிலிருந்து

20கோடி பேர் வரை தீர்த்துக் கட்டப்பட்டிருக்கலாம் என்பது இப்போதைய

கணிப்புகள். மயன் கலாச்சாரம், செவ்விந்தியர்கள் கலாச்சாரம் எல்லாம் இன்று

உயிருடன் இல்லை. அவைகளை மியூஸியத்தில்தான் பார்க்க வேண்டும்..

.இது போன்ற ஒரு கொடுமை உலக வரலாற்றிலேயே நடந்தது

கிடையாது. கி.பி 1500-ஆம் ஆண்டு அந்த பழங்குடியினரின் எண்ணிக்கை 13.5

கோடி என்று கணிக்கப்பட்டது - கிட்டத்தட்ட அன்றைய பாரதத்தின் (பாகிஸ்தான்,

வங்காளதேசம் உட்பட) ஜனத்தொகையும் அந்த அளவுதான். நாம் இப்போது

கிட்டத்தட்ட 125கோடி. ஆனால் அமெரிக்கப் பழங்குடியினரின் எண்ணிக்கை

50,000-க்குக் கீழே. அதாவது 125கோடியாகி இருக்க வேண்டியவர்கள், இப்போது

50,000 பேர் மட்டும்தான் உள்ளனர். இந்த விவரங்கள் American Indiao

Holocaust and Survival என்கிற புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. ஆனாலும் இதை

அதிகம் பேருக்குத் தெரியாமலேயே மறைத்து வைத்திருந்தார்கள்.



அமெரிக்காவில்

செப்டம்பர் 11, 2001-அன்று நடந்த பயங்கரத்தைப் பற்றி கிளின்டன் அவர்கள்

பேசும்போது, "நாம் முன்னால் செய்த கொடுமையின் கர்மம்தான் நம்மைத்

தாக்குகிறது போல இருக்கிறது." என்று கூறினார். இந்தக் கொடுமைக்கெல்லாம்

அடிப்படையான காரணம், கிறிஸ்துவ நம்பிக்கையில் மற்ற மதங்கள் தேவையற்றவை,

சாத்தானின் விஷமங்கள் என்பது மாத்திரம் இல்லாமல்-அவை இயேசுவின்

வருகைக்குத் தடங்கல்கள் என்ற தீவிர நம்பிக்கைதான். மதமாற்றத்தின்

அடிப்படைக் காரணமும் இதுதான்.



இந்த தீவிரமான நம்பிக்கை ஏதோ 400

ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கும் தவறான எண்ணம்; அது இப்போது இல்லை:

என்று நினைக்க வேண்டாம். 20-ஆம் நூற்றாண்டிலே கூட இதே தீவிரமான

நம்பிக்கைதான் கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் பலவற்றையும் உந்துகிறது - என்று

கூறுகிறது. Encyclopacdia தொகுப்பு (P-504, Vol-iv).

இதை

வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - என்ன

செய்தும் மதம் மாற்றலாம், தவறு இல்லை. ஏனென்றால் மற்ற மதங்கள் எல்லாம்

சாத்தான் மதங்கள்தானே; அதற்கு இந்தச் சட்டம் தடங்கல். இதுது¡ன் உண்மையான

காரணம்- ஜெயலலிதா கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்ப்பதற்கு! மதச்சார்பற்ற

தலைவர்களும், கட்சிகளும் இந்த உண்மைகளை வெளிவர விடமாட்டார்கள். ஆனால்

வெளிவராத குற்றத்தினால் உண்மையை மறைக்க முடியாது.



அடுத்ததாக மதமாற்றம் செய்ய என்னென்ன மாதிரியான உத்திகளை, கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் கையாளுகின்றன என்று பார்ப்போம்.



இது வியாபார தந்திரம்தானே



ஆன்மீக

விஷயமான மத நம்பிக்கையில், எப்படி சந்தை கலாச்சாரம் வந்து சேர்ந்தது? இதை

சிறிது விளக்கமாகவே பார்க்க வேண்டும். மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை

எப்படியாவது மதம் மாற்றி தன் மதத்தில் சேர்த்து விட வேண்டும்- என்று மதம்

மாற்றுவதைய தர்மமாக ஒரு மதம் கொண்டால், அந்த மதம் மற்றும் அந்த மதத்தை

சார்ந்த ஸ்தாபனங்கள் எப்படி நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்துவரும்

ஆன்மீக கலாசார முறையிலிந்து மாறுபட்டு இருக்கும். இயங்கும் என்று

பார்ப்போம்.



முதலில் மதம் மாற்றுவதே அந்த மதத்தின் தொழிலாக

மாறும். அதிலிருந்து ஆன்மீகம் மறையும். பிறது அந்த தொழிலுக்கான குணங்கள்

வழி, விதி முறைகள், அமைப்புகள் பயிற்சிகள், பயிற்சி பெற்ற ஊழியர்கள்,

பிரசுரங்கள் மற்ற மதத்தைப் பற்றிய இழிவான எண்ணத்தை தங்கள் மனதிலும்,

தங்களுடைய மத்தை சேர்ந்தவர்களின் மனதிலும் ஏற்படுத்துவது; இது போன்ற

பெரிய திட்டத்திற்கான பணம், நெருக்கம், பணப்புழக்கம்... இப்படியெல்லாம்

பிரம்மாண்டமான போட்டி தயாரிப்புகள் எல்லாமே, இந்த மதத்தின் ஆத்மாவிலும்

வழிமுறைகளிலும் புகுந்து விடுகிறது. இப்படித்தான் மதம் என்பது வியாபார

பொருளாகிறது. மத ஸ்தாபனங்கள், வியாபார ஸ்தாபனங்கள் ஆகின்றன.



சந்தையில்

வியாபாரிகளுக்கிடையே எப்படி பொறாமை, போட்டி, சதி, ஒருவர் மற்றவரை குறை

சொல்வது மற்றவர்களின் பொருள் பற்றி இழிவாகப் பேசுவது என்பவை சர்வ

சாதாரணமாக ஆகிறதோ, அதேபோல் மதங்களுக்கிடையே அதீத உறவு முறைகள்

பரவுகின்றன. ஒரு மதம் இந்த சந்தை கலாச்சாரத்தை கண்டு பிடித்தால், மற்ற

மதங்களும் அதையே செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. ஒரு துளி விஷம்

கலந்தால் எப்படி ஒரு குடம் பாலும் விஷமாகிறதோ, அதுபோல ஒரு மதம் சந்தை

கலாச்சாரத்தை கடைபிடித்தால், அந்த விஷம் எல்லா மதங்களுக்கும் பரவுகிறது.



பின்னர்,

வியாபாரிகள் எப்படி பிறருடைய வாடிக்கைக்காரர்களைத் தம்மிடம் இழுப்பது

என்பது பற்றியே சிந்தித்து, அதற்கான விதிமுறைகளை, விளம்பரங்களை

கையாள்கிறார்களோ அதேபோல் மத ஸ்தாபனங்கள் தங்களுடைய மதத்திற்கு மக்களை

ஈர்க்கவும், வந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், என்ன வேண்டுமானாலும்

செய்யலாம் என்றும் - அதற்காக எது செய்தாலும் அது தர்மமே என்றும் - அந்த

வியாபார முறைகளை எல்லாம் மதத்தின் தார்மீக முறைகளாக அங்கீகரித்து

அனுசரிக்கின்றனர்..

.இதனால்தான் மதங்கள் வியாபாரம் போல சந்தை

கலாசாரத்திற்கு ஆளாகின்றன. விளைவு மதமாற்றம். மதம் (அல்லது கடவுளே கூட)

வியாபார பொருளாக ஆகிவிடுகின்றது. அதாவது மதத்தைவிட மதமாற்றம்

முக்கியமாகிவிடுகின்றது. மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளைவிட, அதனால்

ஏற்படவேண்டிய குணங்களை விட, ஏன் ஆன்மீகத்தின் வளர்ச்சியைவிட, நம் மதத்தில்

எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது, அதாவது ஆன்மீகத்தைவிட எத்தனை தலைகள்

என்கிற எண்ணிக்கைதான் முக்கியமாகி விடுகிறது.



மற்ற மதங்களைப்

பற்றித் தவறான, தாழ்வான எண்ணம் இல்லாமல், அப்படிப்பட்ட எண்ணங்களைத்

தன்னுடைய அமைப்பைச் சார்ந்தரவர்கள் மனதில் உருவாக்காமல், மந்தையாகவோ

அல்லது மற்ற பெரிய அளவிலோ மதம் மாற்றுவது என்பது இயலாத காரியம். அதாவது

எல்லா மதங்களும் சமமே என்று நினைக்கும் எந்த மதமும், மதம் மாற்றுதலில்

ஈடுபடாது. என்னுடைய மதம் உயர்ந்த மதம் என்று நினைப்பது தவறல்ல. ஆனால்

மற்றவர்கள் மதம் காட்டுமிராண்டு மதம், அதை எப்படியாவது தீர்த்துக் கட்ட

வேண்டும் என்று நினைப்பதிலேதான் தீவிரவாதம் வளருகிறது; வன்முறை பிறக்கிறது.



மேலும்,

பிற மதங்களிலிருந்து எப்படி ஆள் பிடிப்பது, அவர்களை எப்படித் தன்

மதத்திற்குக் கொண்டுவருவது என்பன போன்ற நடவடிக்கையெல்லாம், மதத்தை

வியாபாரமாக்குவது மட்டுமல்லாமல், அரசியலாக்கவும் செய்கிறது! ஆள்

சேர்பதற்கு அரசியல் கட்சிகள் என்ன செய்கின்ற்னவோ, அதையே மதங்களும்

செய்யவேண்டி வருகிறது. இப்படித்தான் தெய்வங்கள், மார்க்கெட்டிற்கு,

சந்தைக்கு இழுக்கப்படுகிறார்கள். இதைத்தான் தன் சட்டத்திற்கு ஆதரவாகப்

பேசும்போது ஜெயலலிதாவும் குறிப்பிட்டிருக்கிறார்.



மதம் மாறுவது தவறு!



எப்படியாவது

மற்றவரை மதம் மாற்றிவிடவேண்டும் என்கிறா வெறி ஒரு பக்கம் இருக்க மதம்

மாறுவது, மதம் மாற்றுவது பற்றி ஹிந்து தர்மத்தின் நிலை என்ன? கிறிஸ்துவ

மதத்திற்கும், ஹிந்து தர்மம் அது சார்ந்த மற்ற மதங்களுக்கும் எதிர்மாறான

நிலைகள். ஹிந்து மதத்தின் புராதனமான நிலையை சிருங்கேரி சங்கராச்சாரியராக

இருந்த சந்திரசேகர பாரதி (இப்போதைய மகா சன்னிதானத்தின் குருவின் குரு)

அவர்களுக்கும், கிறிஸ்துவரான ஒரு வெள்ளைக்காரருக்கும் நடந்த சம்பாஷணை

மூலம் அறியலாம்.



அந்த கிறிஸ்துவர், தான் ஹிந்துவாக மாறவேண்டும்

என்று விரும்பி சங்கராச்சாரியை வழிகேட்டபோது, சந்திரசேகர பாரதி கூறியது

(சுருக்கமாக) இதுதான். "நீங்கள் உங்கள் மதத்திலிருந்து மாறவேண்டும் என்று

நினைப்பதே தவறு. உங்கள் மதத்திலிருந்து கொண்டே, அந்த நம்பிக்கையைப்

பின்பற்றியே, ஹிந்து மதத்தின் மூலமாக எந்த நிலையை அடையவேண்டும் என்று

நினைக்கிறீர்களோ அதை அடைய முடியும்" என்று கூறி, அவரை கிறிஸ்துவராகவே

இருக்கும்படி வேண்டினார் சங்கராச்சாரியார். அதாவது மதம் மாறுவதே தவறு

என்று நினைக்கும் ஒரு மதம், அதில் மதமாற்றம் என்னும் பேச்சுக்கே இடமில்லை;

ஆனால் மறுபுறமோ மதமாற்றத்தையே கடமையாக்கிக் கொண்டுள்ள ஒரு மதம்.

இதனால்தான் ஹிந்து ஸ்தாபனங்கள் கட்டாய மதமாற்றத் தடையை வரவேற்கின்றன;

கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் எதிர்க்கின்றன.



இப்போது ஹிந்துவாக மதம்

மாறுவது என்பதெல்லாம் ஹிந்து ஸ்தானங்கள் தற்காப்பு நடவடிக்கையாகச்

செய்கின்றனவே தவிர, மற்ற மதத்தை அங்கீகரிக்கும் எந்த ம்தமும், மற்ற மதத்தை

மதிக்கும் எந்த மதமும், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடவே முடியாது.

மதமாற்றுவதை மத நம்பிக்கையாகக் கொண்டால் அது மதவெறியாகிறது. கிறிஸ்துவ மத

ஸ்தானங்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலை இதுதான்..
.

Tuesday, September 29, 2009

கீதையில் மனித மனம்



மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.

கண்ணன் சொல்கிறான் :

"அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப - துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு."

அர்ஜுனன் கேட்கிறான் :

"மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை. காரணம், உள்ளம் சஞ்சலமுடையது."

"கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது,"

பகவான் கூறுகிறான் :

"தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்."

இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் :

"கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோலப் பல திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்."

- மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பதுபற்றி பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியானயோகமாகும்.

சகல காரியங்களுக்கும் - இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நன்மைக்கும் தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும், புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.

மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.

பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.

கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான். கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.

அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது. அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.

எந்த அனுபவங்களையும் கொண்டு வருவது மனம் தான்.

இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்களை அழித்துவிடுகின்றன.

உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.

என்ன இந்த மனது?

காலையில் துடிக்கிறது. மதியத்தில் சிரிக்கிறது. மாலையில் ஏங்குகிறது. இரவில் அழுகிறது.

"இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்." என்றிருக்க மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.

எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.

கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?

"வைராக்கியத்தால் முடியும்" என்கிறது கீதை. அதையே சொல்கிறார் பகவான் ராமகிஷ்ணர்.

அது என்ன வைராக்கியம்

உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது எந்த நிகழ்ச்சிகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.

மெழுகு போல் இருக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கவிடுவது.

ஆசாபாசங்களில் இருந்து மனதை மட்டும் ஒதுக்கி வைத்து விடுவது. பந்த பாசங்களில் இணங்கிவிடாமல் இருப்பது.

பற்றறுப்பது, சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.

நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்ற முடிவுக்கு வருவது.

ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டிவைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டு கொள்வது.

துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப்படுத்துவது.

இன்பமான விஷயங்களைச் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்வது.

பிறர் தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது.

முயற்சிகள் தோல்வியுறும்போது, இதற்கு இறைவன் சம்மதிக்கவில்லை. என்று ஆறுதல் கொள்வது.

கணநேர இன்பங்களை அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டு கொள்வது.

ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே" என்ற சமநோக்கத்தோடு பார்வையைச் செலுத்துவது.

காலையில் இருந்து மாலை வரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.

சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால் எப்படி இது முடியும்?

பகவத் தியானத்தால் முடியும்.

அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோவிலிலோ வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து வேறு எதையும் நினைக்காமல் இறைவனையே நினைப்பது.

இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மனம் வேறு திசையில் ஓடினால் அதை இழுத்துப் பிடிப்பது.

பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் `ஞானி' யானது இப்படித்தான்.

தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்டவனின் திருப்புகழைப் பாடியதும், இப்படித்தான்.

இயற்கையாகவே கல்வியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு பொருளைப் பற்றிக் கவிதையில் சிந்திக்கும் போது, அவன் மனம் கவிதையிலேயே செல்கிறது.

அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது.

அப்போது ஓர் இடையூறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது.

கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது. அப்போது திறந்த கண்ணின் எதிரில் நிற்கும் மனைவிகூட அவன் கண்ணில் படுவதில்லை.

மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை நோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களில் பறவை மட்டும் தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள் தெரிவதில்லை.

கவிஞனுக்கும் வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும் பெற முடியும்.

அதாவது ஒன்றையே நினைத்தல்.

அந்த லயம் கிட்டிவிட்டால் புலன்களும், பொறிகளும் செயலற்றுப் போகின்றன.

வாயின் சுவை உணர்வு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு, செவியின் ஒலி உணர்வு, பிற அங்கங்களின் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப் போட்டுவிட்டு, புலியைக் கொன்ற வேடன் போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதுதான் சரியான லயம்.

சங்கீத வித்வான் சரித்தர ஆராய்ச்சி செய்வதில்லை. ஸ்வரங்களையும் ராகங்களையுமே ஆராய்ச்சி செய்கிறான்.

ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தைச் செலுத்தினால் சலனமில்லாத ஒரே உணர்ச்சி தோன்றுகிறது.

ஒரு கதை உண்டு!

ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு தரையிலே பாய் விரித்துப் படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து நின்றது.

பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள். துடித்தார்கள்.

அந்தப் பாம்பு குழந்தையையும் தாயையும் கடித்து விடப்போகிறதே என்று பார்த்தார்கள்.

தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள். தாய் எழவில்லை. பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூவை எடுத்துப் போட்டார்கள். தாய் உடனே விழித்துக் கொண்டு, அந்தப் பூவை எடுத்து அப்புறம் போட்டாள்.

தன்னை உதைத்தபோது கூடச் சொரணையில்லாது உறங்கிய தாய், குழந்தை மீது பூ விழுந்ததும் விழித்துக் கொண்டது எப்படி?

அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக் கிடந்ததால்தான்.

ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்தியவர்களே.

இந்த மனதின் கோலங்களாலேயே நான் பலமுறை தடுமாறி இருக்கிறேன்.

ஆசைக்கும் அச்சத்துக்கும் நடுவே போராடி இருக்கிறேன்.

ஜனனம் தகப்பனின் படைப்பு, மரணம் ஆண்டவனின் அழைப்பு, இடைப்பட்ட வாழ்க்கை அரிதாரம் பூசாத நடிப்பு என்பதை, நாளாக நாளாக உணர்ந்து வருகிறேன்.

இன்னமும் முழுப்பக்குவம் கிட்டவில்லை.

திடீர் திடீரென்று மனதில் ஒன்றிருக்க ஒன்று பாய்கிறது.

ஒன்றை எடுத்தெறிந்தால், இன்னொன்று ஓடி வருகிறது.

ஒரேயடியாக மிதித்துக் கொன்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்பது தெரிகிறது.

என் கால்கள் இன்னும் அந்த வலுவைப் பெறவில்லை. பெற முயல்கிறேன். பெறுவேன்.

பிறந்தோருக்காகச் சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும் பரந்தாமன் கூறியதுபோல் சமநோக்கத்தோடு நின்று மன அமைதி கொள்ள முயல்கிறேன்.

அதை நான் அடைந்துவிட்டால், கடவுள் கண்களிலே கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அடிபட்டுப்போகும்.

இவ்வளவையும் நான் சொல்லுவது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்து மதத்தின் நோக்கம் என்பதை விளக்கத்தான்.

லௌகிக வாழ்க்கையைச் செப்பனிடும் இந்து மதக் கருவிகளில் பகவத் கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு.
 ====++++====

Saturday, September 26, 2009

இந்து மதம் - கேள்வி பதில்

சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.பாரதி ஒரு இந்துத்துவ தீவிரவாதி என்று ஆகப்பெரியஎழுத்தாளர் ஒருவர் கூற, இன்னொரு எழுத்தாளர் ஆதரிக்கவும் செய்கிறாரே? பாரதிஉண்மையில் ஒரு தீவிரவாதியா?


பதில் : இந்துத்துவம் பற்றி மேலே கொடுத்துள்ளவிளக்கத்தை படித்தால் இந்த கேள்வியே எழாது. பாரதி தீவிரமானவர். பாரதிஉறுதியாக தம்மை இந்துவாக அடையாளம் காட்டிக்கொண்டவர். தொடர்ந்து வரும்யோகிகளின் பரம்பரையில் வந்தவராக தம்மையும் அடையாளப்படுத்திக் கொண்டவர்.இந்து சமூகத்தை சீர்படுத்த, மேம்படுத்த இடையறாது சிந்தித்து உழைத்தவர்.புராணங்கள் உண்மையா பொய்யா?பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வுநவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு.புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.சுவர்க்கம், நரகம் என்பது என்ன?பதில் :நமது நல்லது கெட்டதற்கு தகுந்தாற்போல், நமது மனம் அனுபவிக்கும் உணர்வுகளேசுவர்க்கம், நரகமாக குறிப்பிடப்படுகின்றன. சஞ்சலப்பட்ட மனம் கனவு நிலையில்துக்கமான விஷயங்களை கண்டு விசனப்படுவது போல, நமது மனோநிலைக்கு தகுந்தவாறுநமது கர்மபலன்களை மனம் நுகர்ந்து மகிழவோ, வருந்தவோ செய்கிறது. இதுவேசுவர்க்கம், நரகம்.ஆபிரகாமியத்துவத்தின் இந்த சுவர்க்கம் நரகம் திரிந்துபோய், அடியார்களைமிரட்டி தம்மிடமே வைத்துக்கொள்ளவும், எதிராளிகளை மிரட்டி தம் பக்கம்சேர்க்கவும் ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தில்அப்படி கிடையாது. நல்லது செய்தால், மகிழ்சியை அனுபவிப்போம். கெட்டதுசெய்தால் துக்கத்தை அனுபவிப்போம். இதில் ஜாதி - மத பாகுபாடெல்லாம்கிடையாது.மேலும் இந்து மதத்தில் நிரந்தர சொர்க்கம், நிரந்தர நரகம் கிடையாது.அந்த நிலைகள் Transit Lounges போன்றவையே. நிரந்தரமாக நல்லவர்களும் இல்லை,நிரந்தரமாக கெட்டவர்களும் இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் இறைவன்இருக்கிறான் எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு தீயமனிதன் திருந்தலாம்என்பதே இந்துமதம் சொல்வது.எனவே, சொர்க்கம் அல்லது நரகத்தை நமது கர்மபலன்களுக்கேற்றவாறு நாம்அனுபவித்துவிட்டு மீண்டும் பூமியில் பிறப்போம். பூமி-சொர்க்கம் - நரகம்எல்லாவற்றிலுமிருந்து விடுபடுவதே முக்தி. இதுவே இலக்காக பெரும்பாலானஇந்துத்துவ ஆசான்களால் சொல்லப்படுகிறது.




புண்ணியம் - பாவம் என்பது என்ன?


பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.மகாபாரதம் கூறுகிறது -श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் “தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட.பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”தர்மம் என்பது எது?பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையேஇது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின்அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம்பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரகநிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களைஅனுபவிக்கின்றார்கள்.நான் ஒரு முஸ்லீம்/கிறிஸ்தவன். என்னால் ஹிந்து மதத்துக்கு மாற முடியுமா? பதில் : ஓ தாராளமாக. அப்படி மாறிய பலலட்சக்கணக்கானோர் இருக்கின்றனரே. சாகர்களிலிருந்து, ஹூனர்களிலிருந்து,யவனர்களிலிருந்து, இன்று மதம் மாறும் இஸ்கான்(ISKCON) வெள்ளைக்காரர்கள்வரை எத்தனையோ கோடி நபர்கள் சரித்திரமெங்கும் இந்துக்களாக மாறிஇருக்கின்றனர்.சோதிடம் உண்மையா?பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.“சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை - நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?




ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?


பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.ஜாதிகளைப் பற்றி வரலாறு உண்டா? உண்மையில் ஜாதிகள் எப்படி தோன்றின?பதில் : இந்து மதத்தின் சகிப்புத்தன்மையின் அடையாளமேஜாதிகள். பல குழுக்கள் தத்தமது கலாச்சாரங்களை பின்பற்ற முனைகிறபோது இந்துமதம் அந்தக்கலாச்சாரங்களை அழிக்க முயல்வதில்லை. அதனாலேயே ஜாதிகள் எழுந்தன.இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்பது தேவைதானா என்பது நம்மையே நாம்கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.வர்ணாஸ்ரம தர்மம் என்பது என்ன? பதில் : வர்ணம் வேறு, ஆசிரமம் வேறு. ஒருவரின் இயல்பு - தேர்வு - விருப்பத்திற்கேற்றவாறு செயல்புரிவது வர்ணம், ஆசிரமம்.வேதகால சமூகத்தில் இந்த வித்தியாசங்கள் எல்லாம் வெறும் வித்தியாசமானபாதைகளாகவே இருந்தன. உயர்வு தாழ்வு இல்லை. ஒரே குடும்பத்திலிருந்து தமதுவிருப்பத்திற்கேற்றவாறு பல வர்ணங்களை சார்ந்திருந்தார்கள். ஆன்மீகநாட்டமுடையவன் அந்தணன் ஆனான் என்பதை வேதகாலத்திற்குப் பிறகும் காண்கிறோம்.இன்றும் பழைய இந்துமதத்தைப் பின்பற்றும் பாலித்தீவு ஹிந்துக்களிடையேஇப்படிப்பட்ட முறையே காணப்படுகிறது. அங்கே வர்ணங்கள் நான்கும்இருந்தாலும், உயர்வு தாழ்வு இல்லை, மணவுறவுக்கு இந்த வர்ணங்கள்தடையாயில்லை.அதே போல,வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆசிரமங்களை அன்றுமனிதர் ஏற்றனர். படிக்கிற காலத்தில் மாணவனாகவும், மணம் புரிந்துபொருளீட்டிய காலத்தில் இல்லறமென்னும் ஆசிரமத்திலும், அதற்குப் பிறகுவனப்பிரஸ்தம் என்ற நாடோடி-சிந்தனையாளன் நிலையிலும், கடைசியாக அனைத்தின்மீதும் உள்ள பற்றைத் துறந்து, துறவறம் மேற்கொள்வன் அதற்குரிய ஆசிரமமானசந்நியாச ஆசிரமத்தை சார்ந்தவனாக காணப்படுகிறான்.ஆனால், தோற்றங்கள் எப்படி இருந்தாலும் ஜாதிகளைப் போலவேஇவையும்(வர்ணம்+ஆசிரமம்) இன்றைய காலகட்டத்தில் தேவையா என்பது நம்மையே நாம்கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.ஏழைகள் பசியில் வாட, ஹிந்துக்கள் கோவிலில் மட்டும்நகையாகவும், பணமாகவும் குவிக்கலாமா?


கோவில்களுக்கு ஏன் காணிக்கை செலுத்தவேண்டும்?

அதனால் பயன் என்ன?

அதற்கு பதிலாக கோவில் பணத்தை எல்லாம் எடுத்துஏழைகளுக்கு உதவினால் என்ன?


பதில் : கோவில்களுக்கு கொடுப்பதைவிட ஏழைகளுக்குகொடுப்பது சாலச்சிறந்தது. ஆனால், எவருக்குமே கொடுக்காமல் இருப்பதைவிடகோவில்களுக்கு கொடுப்பது மேல். குறைந்த பட்சம், ஒரு சக்தி மேலே இருக்கிறதுஎன்பதையாவது இந்த சுயநலமிகள் ஏற்கின்றனர் இல்லையா