Tuesday, December 21, 2010

ஹிந்து மதம் ஒன்றே ஒன்றுதான் பிரபஞ்சம் மீண்டும் உருவாவது என்ற கொள்கை...

உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!

பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.

அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.

இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.

இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.

இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!

ஹிந்து இலக்கியத்தில் சங்கம், பத்மம் போன்ற மிகப்பெரும் இலக்கத்தைச் சுட்டிக் காட்டும் வார்த்தைகள் உள்ளன. மஹாபாரதத்தில் பெரிய எண்களைக் குறிக்கும் சொற்கள் வரிசையாக உள்ளன:

அயுதம் என்றால் பதினாயிரத்தைக் குறிக்கும்.
ப்ரயுதம் என்றால் பத்து லட்சத்தைக் குறிக்கும்.
சங்கு என்றால் பத்துலட்சம் கோடியைக் குறிக்கும்.
பத்மம் என்றால் நூறு கோடியைக் குறிக்கும்.
அற்புதம் என்றால் பத்துக் கோடியைக் குறிக்கும்.
கர்வம் என்றால் ஆயிரம் கோடியைக் குறிக்கும்.
சங்கம் என்றால் லட்சம் கோடியைக் குறிக்கும்.
நிகர்வம் என்றால் பதினாயிரம் கோடியைக் குறிக்கும்.
மஹாபத்மம் என்றால் நூறுலட்சம் கோடியைக் குறிக்கும்.
மத்யம் என்றால் பதினாயிரம் லட்சம் கோடியைக் குறிக்கும்.
பரார்த்தம் என்றால் லட்சம் லட்சம் கோடியைக் குறிக்கும்!

இப்படி பிரம்மாண்டமான எண்கள் சாதாரணமாகக் குறிப்பிடப்படுகின்றன. இப்படிப்பட்ட பெரிய இலக்கங்கள் ஹிந்து மத இலக்கியத்திலும் ஹிந்து வாழ்க்கை முறையிலும் மட்டுமே உள்ளன.

கார்ல் சகன் அதிசயித்த விஷயம் ஹிந்து புராணங்களில் உள்ள யுகம், கல்பம் ஆகியவற்றை பற்றிய தீர்மானமான கருத்துக்கள் பற்றிவை! முடிவில்லாது சுழற்சி முறையில் தோன்றி (பிரளய காலத்தில்) அழியும் பிரபஞ்சம் பற்றிய கருத்து அவரை வியக்க வைத்தது.


இதைக் கண்டு அதிசயித்து அறிவியல் ரீதியாக பிரபஞ்சத்தின் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர் கூறினார்:- "உலகின் பெரும் மதங்களில் ஹிந்து மதம் ஒன்றே ஒன்றுதான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சம் உருவாகி பிரளயகாலத்தில் அழிந்து மீண்டும் உருவாவது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. நவீன பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கருத்துடன் கால அளவீடுகளில் ஒத்துப் போகும் ஒரே மதம் இதுதான். நமது சாதாரண இரவு பகலில் ஆரம்பித்து பிரம்மாவின் இரவு பகல் பற்றி - 864 கோடி வருடங்களைப் பற்றி - அது பேசுகிறது. பூமி, சூரியன் வயதையும் தாண்டி 'பிக் பேங்' தோன்றியதிலிருந்து பாதி அளவு காலத்தைப் பற்றி மட்டும் அல்ல, இன்னும் எல்லையற்ற காலத்தைப் பற்றியும் அது கூறுகிறது"

எல்லா பழைய நாகரிகங்களும் அழிந்து பட்டுள்ள நிலையில் ஹிந்து நாகரிகம் மட்டும் ஜீவனுள்ளதாக இருப்பதை அறிந்த அவர் உடனே இந்தியா வர ஆசைப்பட்டார்! பிரபஞ்சம் பற்றிய தன்னுடைய அறிவியல் தொடருக்கு சரியான ஆரம்பம் இந்தியாவில் கிடைக்கும் என்று அவர் நம்பினார். உடனே இந்திய பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவில் அவர் அடைந்த ஆச்சரியங்கள் எத்தனையோ!

காஸ்மாஸ் தொடரில் ஹிந்து மதத்தில் பிரபஞ்ச ரகசியத்தை விளக்கும் (சிதம்பர) நடராஜரைக் காண்பித்து பிரபஞ்சம் பற்றி அவர் விளக்கினார்.

கார்ல் சகன் அடிக்கடி பில்லியன் அண்ட் பில்லியன்ஸ் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி! பில்லியன்ஸ் அண்ட் பில்லியன்ஸ் என்றால் கோடானு கோடி) என்ற தொடரால் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையைக் கூறுவார். ஆகவே அவரை பில்லியன்ஸ் அண்ட் பில்லியன்ஸ் என்ற தொடரைச் சொல்லி கேலி செய்வார்கள்.

எல்லையற்ற பிரபஞ்சம் பற்றி அவர் குறிப்பிட்ட விஞ்ஞானக் கருத்துக்கள் ஹிந்து மதக் கருத்துகளுடன் ஒத்துப் போகி‎ன்ற‎ன. பிரபஞ்சம் எல்லையற்றது; விரிந்து கொண்டே போகிறது;

பிரளய காலத்தில் சுருங்கும் கோடானு கோடி கிரகங்கள், நட்சத்திரங்களின் கணக்கிற்கு
எல்லையே இல்லை - போ‎ன்ற பல கருத்துக்களி‎ல் ஒற்றுமை காணப்படுகி‎வது வியக்க வைக்கிறது.


(நன்றி : ஞான ஆலயம் ஜூன் 2009)

அனைவரும் அர்ச்சகர்கள்!

தமிழகத்தில் அரசு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி நடத்த ஏற்பாடுகள் செய்து அதற்கான பள்ளிகளையும் நிறுவியிருக்கிறது. இன்னிலையில் கேரளா ஒருபடி முன்னே சென்று இந்த முறையை செவ்வனே நடத்திக் காட்டியிருக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சி என்னவென்றால், இந்த முயற்சிக்கு கேரள நம்பூதிரிகள் (பிராமண அர்ச்சகர்கள்) முனைப்புடன் முன்னின்று செயலாற்றி வருவதுதான்!!
கேரளாவிலுள்ள கல்பேட்டா என்ற ஊரில் இருக்கும் "பொங்கிணி தேவி" கோயிலில் ஆதிவாசி சிறுவர்கள் 14 பேர் உட்பட அனைத்து சாதிகளையும் சார்ந்த 25 சிறுவர்களுக்கு சமஸ்கிருத மொழி, வேதப் பயிற்சி, கோயில் ஆகமங்கள், மந்திரங்கள் ஆகியவை முறையாக போதிக்கப் படுகின்றன. பையனூர் ஸ்ரீதரன் நம்பூதிரி தலைமையிலான பல அர்ச்சகர்கள் இச்சிறுவர்களுக்குப் பயிற்சியளித்து வருகின்றனர்.
இந்து சமய பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டுமென்றால் அனைத்து வகுப்பினர்களின் பங்கேற்பு இன்றி நடைபெற இயலாது என்பதை நன்குணர்ந்து நம்பூதிரிகள் இந்த முயற்சியில் முழுமூச்சுடன் இறங்கியிருக்கின்றனர்.
இதேபோல் தமிழ்நாட்டிலும், பிராமண சங்கங்கள், அர்ச்சகர் கூட்டமைப்புக்கள் போன்றவை முன்னின்று தலித்துக்கள் உட்படஅனைத்து வகுப்பினருக்கும் வேதம், ஆகமம் முதலிய பயிற்சிகளை அளிக்க முன்வரவேண்டும். இதனைப் பெருமளவில் தமிழகமெங்கும் பரவலாக நடத்த வேண்டும். அரசுடன் கைகோர்த்து இத்தகைய இந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் அவா!!

ஹிந்து மதத்தின் வீழ்ச்சி ஏன் !

'ஹிந்து மதம்', 'ஹிந்து' என்ற சொல் இந்திய சமயத்தினர்கள் மீது வெள்ளைக்காரர்கள் திணித்ததே. இந்தியாவில் மதம் என்ற பெயரில் எதுவுமே இருந்தது கிடையாது, தமிழில் சமயம் என்றும் வடமொழியில் 'தர்ம(ம்)' என்றே வழங்கப்பட்டு வந்தது. சடங்குகளையும், கொள்கைகளையும் சார்ந்தது சமயங்கள் அவற்றின் வேறுபாடுகளை வைத்து வைதீகம் (பார்பனர்களின் சமயம்), பவுத்தம், ஆசிவகம், சமணம், வைணவம், சைவம், சிறுதெய்வ சமயம் என்று பல்வேறு பெயர்களில் வழங்கப் பெறலாயிற்று. ஆதி இந்தியர்கள் இவற்றில் எதோ ஒரு சமயம் சார்ந்தவர்களாக இருந்தனரேயன்றி அனைத்தையுமே ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். பெளத்தன் சமணனை சாடுவதும், இருவருவரும் ஒருவருக்கொருவர் சாடுவதும், சேர்ந்து வைதீக சமயத்தைச் சாடுவதுமாக இருந்தனர்.

இந்திய புறச் சமயத்தினரான வெள்ளைக்காரர்களும், அவர்களுக்கு முன்பே வந்த லோடி வம்சமும், கஜினி முகம்மதுவும் இங்கே இந்தியாவில் நிலவிய சமயங்கள் அனைத்தையும் பொதுவான ஒன்றாகவே பார்த்தனர், சிந்து நதிக்கு கிழக்கே இருப்பதால் 'இந்தியா' என்று இங்கு நிலவிய சமயங்கள் அனைத்திற்கும் பொதுவான பேராக 'ஹிந்து' சமயம் என்றும் பெயரிட்டனர். அந்த பெயர்கள் அவர்களுக்குள் அழைத்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டதே அன்றி, பாரத நாட்டினரான நீங்கள் இன்று முதல் இந்தியராகவும், இந்துக்களாகவும் அழைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் ஆணை பிறப்பிக்கவில்லை. அதாவது சைனா நாட்டினரை சீனர்கள் என்கிறோம், ஒரு சீனரிடம் சென்று நாம் அவர்களை 'சீனர்கள்' என்று சொல்வதைச் சொன்னால் தான் அவனுக்கு அப்படி அழைக்கப்படுவதே தெரியும். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தங்களை 'சீனர்கள்' என்று அழைக்கிறார்கள் என்பது சீனருக்கு தெரியாது. இப்படி புறசமயத்தினர் தங்களுக்குள் அழைத்துக் கொண்ட ஒன்றை, விடுதலை போராட்ட்ட காலத்தில் இந்திய சமயத்தினரை ஒன்று திரட்ட இங்குள்ளவர்கள் பயன்படுத்தத் தொடங்கிய போது தான் 'இந்தியா', ஹிந்து என்ற சொல் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது. அதுவரை மக்களின் முகவரிகள் எதோ ஒரு இந்திய சமயம், பாரத தேசத்தை / நாட்டை சேர்ந்தவன் என்பதாகத் தான் இருந்தது. கடவுள் கொள்கை என்றால் அதை மதம் என்றே அழைத்து பழகிய புறசமயத்தினர் (வெளிநாட்டினர்) பாரத சமயங்களை மதம் என்ற ஒற்றைச் சொல்லுடன் 'ஹிந்து' என்ற பெயருடன் அழைத்தனர், அதுவே 'ஹிந்து' மதம் ஆகிற்று.

இந்தியர்களை ஒருங்கிணைக்கும் சொல் அல்லவா ? என்று நினைக்கலாம். ஆனால் இந்தியா என்பது பல்வேறு கலச்சார நம்பிக்கைகள் கொண்டது, அவரவர் நம்பிக்கையே அவரவர்களுக்கு உயர்வானது, சைவ - வைணவ சண்டைகள் இன்றும் தொடர்வதையும், யானைக்கு வடகலை நாமமா ? தென்கலை நாமமா ? என்கிற வழக்கு இன்று முடிந்தபாடில்லை என்றே சொல்கிறார்கள். இப்படி இருக்கையில் 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லால் யாருக்கு லாபம் ? வேற்றுமையில் ஒற்றுமை காணப்பயன்படுகிறதா ? அப்படி எல்லாம் இருப்பது போல் தெரியவில்லை. இன்றும் வைணவர்கள் சிவனை பொருட்டாக நினைப்பது இல்லை, சைவ சமயத்தினரும் அப்படியே. ஆதிசங்கரின் அறுசமயமும் கொள்கையாக ஏற்கப்பட்டதே அன்றி, அதைத் தவிர்த்து அவை யாதொரு வளர்ச்சியும் பெறவில்லை, ஏனெனில் அவை வலிந்து புகுத்தப்பட்ட ஒன்று. அதாவது சமயங்களை ஒற்றைப் புள்ளியில் இணைப்பது, அல்லது அந்த புள்ளியில் இருந்து பிரிப்பது, அப்படி பிரித்து வழங்க முற்பட்டதே ஆதிசங்கரின் அறு சமயம், ஆனால் அதன் பிறகு இராமனுஜர் போன்றவர் அவருக்கென கொள்கைகள் வைத்திருந்தால் ஆதிசங்கரரின் அறுசமயம் வளர்ச்சியடையவில்லை. எதுக்கு இதைச் சொன்னேன் என்றால், ஒற்றைத் தன்மையில் அடைக்க முயலும் எதுவுமே வெற்றிபெறுவதில்லை என்பதற்காக சுட்டினேன்.

மேலே சொன்னது போல் சுதந்திர போராட்ட காலத்தில் இந்தியாவில் இருந்த சமயங்களை ஒருங்கிணைக்க சமயவாதிகளால் புறசமயத்தினர் கொடுத்த 'ஹிந்து' இந்தியா பெயர்கள் பயன்படுத்த முயற்சி நடந்தது, ஆனால் அவை இன்றும் கூட வெற்றி பெறவில்லை என்பதே உண்மை. நமக்கு ஆவணங்களில் 'ஹிந்து' இந்தியா என்று போட்டுக் கொள்கிறோம், கொடுக்கிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால் தமிழனை இந்தியனாக நினைக்கும் கர்நாடகத்தவர் இல்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் மொழிகளால் இந்தியா வேறுபட்டது. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வது போல் 'புண்ணாக்கு' விற்பனெல்லாம் தொழில் அதிபர் என்கிறான் என்பது போல், கார்ப்ரேட் சாமியார்களாலும், போலி சாமியார்களாலும் 'ஹிந்து' என்ற சொல் ஆன்மிக விற்பனையின் லேபிளாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது பொண்ட்டியின் தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடியவனெல்லாம் தன்னை 'ஹிந்து' சாமியார் என்று அழைத்துக் கொள்வதால் 'ஹிந்து' சமயத்தின் பெயர் வெகுவாகவே பாதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. அதுமட்டுமில்லாமல் வாயில் வந்ததையெல்லாம் உளறி கொட்டி அதை சமய இலக்கியம் என்றும், அறிவுக்கு ஒவ்வாத கதைகளையும் புராணங்களையெல்லாம் 'ஹிந்து' என்ற பெயரில் சேர்த்துக் கொள்வதால், அவற்றிக்கு விளக்கமும் சப்பைக் கட்டுகளையும் செயயும் வீன் வேலைக்கு ஆன்மீக வாதிகள் தள்ளப்படுகின்ரனர். மூட நம்பிக்கைகளுக்கு
முட்டுக் கொடுப்பதே வேலையாகப் போனால் சமயங்களையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் ஊட்டுவது எங்ஙனம் ? இராமகிருஷ்ணர், விவேகநந்தர் போன்ற எத்தனையோ மகான்கள் தோன்றினாலும், புற்றீசல்கள் போல் போலிசாமியார்களும் தோன்றி சமய நம்பிக்கைகளை சீர்குலைப்பதால் உண்மையான ஆத்திகருக்குக் கூட சமய நம்பிக்கைள் மீது சந்தேகங்கள் எழும். இவை அனைத்திற்கும் காரணமே தேவைக்கு மிகுதியாக கட்டுக் கதைகளை அவைகள் 'ஹிந்து' மதததைப் போற்றுகிறது என்ற பெயரில் உள்வாங்கியதே.

'ஹிந்து' மதம் என்கிற ஒற்றைச் சொல் ஒருங்கிணைப்பால் இந்திய சமயங்கள் வீழ்ந்ததேயன்றி எழவேயில்லை. பிரித்தாழும் சூழ்ச்சி போல் இவை சேர்த்தறியும் சூழ்ச்சி போலாகும். இந்திய சமயங்கள் அனைத்தும் சேர்ந்து ஒவ்வொன்றின் முரண்பாடுகளையும் ஏற்றுக் கொள்வது தான் ஹிந்து மதம் என்றும் அவனே 'ஹிந்து' என்ற கட்டாயத்துக்கு இட்டுச் சென்றுவிட்டது. எவனோ ஒருவன் நரபலி இடுவதை 'இந்து சமய நம்பிகை இல்லை' என்று நம்மால் துணிந்து சொல்ல முடியவில்லையே, இப்படி 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லில் நம்மை நாமே அழைத்துக் கொள்ளாமல் இருந்தால் 'நரபலி இடும் பழக்கம்' சைவ, வைணவத்தில் இல்லை என்று சொல்ல முடியும். இந்திய சமயத்தினர் தங்களின் சமயப் பெயரை விட்டு தம்மை 'ஹிந்து' என்று அழைத்துக் கொள்வது முட்டாள் தனமானது. அப்படி அழைத்துக் கொள்வது இந்திய சமய, தத்துவ நம்பிக்கைளை வீழ்ச்சிக்கே அழைத்துச் செல்லும், அப்படி நடந்ததால் தான் தீண்டாமையால் தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பலர் இந்திய சமய நம்பிக்கைகள் மீது நம்பிக்கை இன்றி புற சமயங்களை நாடி இருக்கின்றனர். பகுத்தறிவு வாதிகளும் இந்திய சமயங்களின் நம்பிகை எது ? மூட நம்பிகை எது ? என்று அறியாமல் ஒட்டுமொத்தமாக 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லைக் குறிவைத்தே செயல்படுகின்றனர். ஹிந்துத்துவா வாதிகளும் அரசியல் நோக்கிற்காக 'ஹிந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் மேற்கொண்டு என்ன சொல்ல ? ...........

 

மதமாற போகிறவர்களிடம் ஒரே ஒரு கேள்வி

 கடைசியாக கிறிஸ்த்துவ மதத்திற்கு மாற நினைப்பவர்களுக்கு ஒர் செய்தி,  ஒரு சமயம் இயேசுநாதரிடம் உங்கள் உபதேசம் எல்லோருக்கு மானதா?  யூதர்களுக்கு மட்டுமானதா?  என்று கேட்டதற்கு அவர் கையில் இருக்கும் ஒரே ஒரு ரொட்டி துண்டு பசியால் அழுகின்ற உன் குழந்தைக்கா?  அல்லது உன் வீட்டு நாய்க்கா?  என்று திருப்பி கேட்டார்.  இதற்கு உண்மையான அர்த்தம் எனது உபதேசம் இஸ்ரேலியர்களுக்கு மட்டும்தான்.  என்பதாகும்.  இப்போது நாம் மதமாறபோகிறவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விருப்புகிறோம்.  நீங்கள் இந்தியர்களா?  இஸ்ரேலியர்களா?
-----------


வட மாநிலங்களில் உள்ள காடுகளில் உள்ள ஆதிவாசிகளிடம்,

கிறிஸ்த்தவர்கள்,வேன், ஜீப்,கார் போன்ற வாகனங்களை கொண்டு 

வந்து நிறுத்தி அதை ஸ்டார்ட் செய்ய முடியாமல் 

அங்குள்ள ஆதிவாசிகளிடம் நடித்து முதலில் அவர்களின் அனுதாபத்தை,

பெறுகிறார்கள்.பின்பு ஹிந்து கடவுள்களின் பெயரை சொல்லி வாகனத்தை 

தள்ள சொல்கிறார்கள்.வாகனமும் ஸ்டார்ட் ஆவதில்லை.காரணம்,சாவியை அவர்கள் 

போடாமலே இருப்பதனால்தான்.இப்படி பல முறை செய்து ஆதிவாசிகளை சலிப்படைய 

வைக்கிறார்கள்.பின்பு,இயேசுவின் பெயரால் வாகனத்தை தள்ளச் சொல்கிறார்கள்.

அப்படி அவர்கள் , தள்ளும் போது சாவியை போட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்து ,

ஏசுவுக்கு மட்டுமே சக்தி இருப்பது போல் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள்.அதனால் ,

அந்த ஆதிவாசிகளிடமும் ஒரு சலனத்தை உருவாக்கி மதம் மாற்றும் முயற்ச்சியில்

வெற்றி பெறுகிறார்கள். இது உண்மை.