Monday, November 2, 2009

ஹிந்து மதத்தின் எதிரி சாதி வேறுபாடுதான்!

ஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த அதிகாரிகள் 1947-க்கு முன் இந்தியாவில் பணியாற்றியவர்கள். '200 ஆண்டு காளம் பாரதத்தை எப்படி ஆண்டீர்கள்' என்று அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பாரதத்தில் பல இந்துக்கள் அடிமைத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள். இதுவே எங்கள் ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இப்படிப் பட்டவர்கள் இருக்கும்போது பாரதத்தை அடிமைப் படுத்தவோ தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கவோ நாங்கள் சிரமப்பட வேண்டியதில்லை' என்றனர்.



ஆங்கிலேய அதிகாரிகள் சொன்ன இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேசிய சக்திகள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் சமமானவர்கள்; சம உரிமையுடைய குடிமக்கள். இது உறுதிப்படாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். ஹிந்துக்களில் ஒரு பகுதியினர் இரண்டாந்தர குடிமக்கள் என்றால் அதற்குக் காரணம் ஹிந்துக்களே தவிர வேறு யாருமில்லை.


இந்தக் கேள்விக்கு விடை தேட வேண்டிய பொறுப்பு தேசிய எண்ணம் கொண்டவர்களுக்கு உல்ளது. யாரையும் இகழ்வாக நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தை பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அடிமையாக இருக்க மாட்டோம் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். சம உரிமையுள்ளவர்களாகச் செயல்படும்போதுதான் எழுச்சி மிக்க பாரதத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.





(ஜூன் 16-ம் தேதி டில்லியில் நடை பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறப்பு பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் ஓய்வு பெர்ற I.F.S அதிகாரி ஓ.பி.குப்தா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.)

மதம் மாற்றுவதே மத நம்பிக்கையானால்....

ஒரு

வேண்டுகோள், இதைப் படிக்கும்போது கிறிஸ்த்ஹுவ மத நம்பிக்கைகளை நான்

விமர்சனம் செய்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எந்த கிறிஸ்துவ மத

நம்பிக்கைகள் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களைப் பாதிக்கிறதோ, எந்த

நம்பிக்கைகள் மற்ற மதத்தினருக்கும் கிறிஸ்துவ ஸ்தாபனங்களுக்கும் கிடையே

பிரச்சினைகளை உருவாக்குகின்றனவோ, அவைகளைப் பறித்தான் இங்கு

குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு மதத்திற்கும் நம்பிக்கை மாத்திரம் உண்டு.

ஆனால் அது மற்ற மதங்களைப் பாதிக்கக்கூடாது அவ்வளவுதான்.



ஜெயலலிதா

கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் ஆசை காட்டி, மோசம் செய்து,

மிரட்டி எவரையும் மதமாற்றம் செய்யக்கூடாது என்றுதானே கூறுகிறது. இது எல்லா

மதத்திற்கும் நல்லதுதானே! எப்படி எல்லா மதத்தினரையும் ஒரே மாதிரி

பாதிக்கும் ஒரு சட்டத்தைப் பற்றி, எதிரும் புதிருமான கருத்துகள்

நிலவுகின்றன - அதுவும் ஆன்மீக வாதிகளிடையே அரசியல்வாதிகள் கூட ஒருவர்

ஆதரித்தால், மற்றவர் எதிர்க்கவேண்டும் என்று வேண்டுமென்றே எதிர்க்கலாம்.

ஆனால் கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் ஏன் இந்தச் சட்டத்தை எதிர்க்கவேண்டும்?
இந்த

கேள்விகளுக்கு சரியான விடை வேண்டுமானால், இந்தப் பிரச்சினையைத் தெளிவாக

அலசவேண்டுமானால், ஒரு நிபந்தனை, கிறிஸ்துவ ஸ்தாபனங்களைப் பற்றிப் பொதுவாக

இருக்கும் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்டு - அவர்கள் செய்யும் சேவை என்னும்

போர்வையை நீக்கிவிட்டு - உலக கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களின் ஆதார

நம்பிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால் தான், ஏன் கட்டாய மதமாற்றத்

தடைச்சட்டத்திற்கு நம்நாட்டு கிறிஸ்துவ அமைப்புகள் இவ்வளவு எதிர்ப்பு

தெரிவிக்கின்றன என்பது புரியும்.



மேலும் நடைமுறையில் மாத்திரம்

இல்லாமல், நம்பிக்கை அடிப்படையிலும் கிறிஸ்துவ மதம், ஹிந்து மதத்தை எந்த

கண்ணோட்டத்தோடு பார்க்கிறது, அதற்கு மாறாக ஹிந்து மதம் கிறிஸ்துவ மதத்தை

எப்படிப் பார்க்கிறது - என்பதனையும் பட்டவர்த்தனமாக எடுத்துச்

செல்லவேண்டும். மத மாற்றம் செய்யும் அகில உலக கிறிச்துவ நிறுவனங்கள்

எப்படி செயல்படுகின்றன; அவர்கள் மதத்தை எப்படி வியாபாரப் பொருளாக்கி,

மதங்களின் உறவுகளை சந்தைக் கலாசாரமாக்கி தங்கள் மதத்திற்கு ஆள் சேர்ப்பது

ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள்; எப்படி இந்த

குறிக்கோளுக்கு அவர்கள் எது செய்தாலும் - பள்ளிக்கூடமோ ஆஸ்பத்திரியோ

குஷ்ட ரோக நிவாரணமோ - அது பக்க வாத்யம்தான் என்பது புரியும்.



அது

மாத்திரம் அல்ல, கிறிஸ்துவ ஸ்தாபனங்களுக்கு உலக அளவிலான திட்டங்கள்,

ஒவ்வொரு நாட்டிலுள்ள கிறிஸ்துவ ஸ்தாபனங்களும், உலக கிறிஸ்துவ

ஸ்தாபனங்களின் வரையறையில்தான் இயங்கும். அது தானாக ஒன்றும் செய்யமுடியாது.

இந்தில் எந்தத் தனி நாட்டின் கிறிஸ்துவ நிறுவனங்களுக்கும் சுதந்திரம்

கிடையாது.



எல்லா சர்சுகளும், உலக சர்ச் அமைப்புக்குக் கீழேதான்.

உலக சர்ச்சுகளின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் நம் நாட்டு

சர்ச்சுகள், (ஆர்ச் பிஷப்புகள்) செயல்படுகின்றன. உலக சர்ச்சுகள் மதமாற்றம்

செய்யவேண்டிய கட்டாயத்தினால், சந்தைக் கலாசாரத்தை மதத்துடன்

இணைத்துவிட்டார்கள். இந்த மதச்சந்தை வியாபாரத்தின் தாத்பர்யத்தையும்,

விளைவையும் பற்றித் தனியாக விளக்கி எழுதியிருக்கிறேன். இந்த மத சந்தைக்

கலாசாரத்திற்கு ஆரம்பக் காரணம், மற்ற மதத்தலைவர்களை எப்படியாவது மதம்

மாறாச் செய்து, தன் மதத்தில் சேர்த்துவிட வேண்டுமென்கிற கட்டாய தர்மம்

கிறிஸ்துவ மத நம்பிக்கையில் இருப்பதுதான். இதுதான் இப்போது

மதங்களூக்கிடையே தீவிர போட்டியை உருவாக்கியிருக்கிறது.



இந்தப்

போட்டியை சர்வதேச அளவில் முதலில் ஆரம்பித்து, மிகவும் வெற்றிகரமாக

நடத்திவருவது கிறிஸ்த்ஹுவ மத ஸ்தாபனங்கள். அவர்கள் ஏன் கிறிஸ்துவர்களாக

அல்லாதவர்களை கிறிஸ்துவர்களாக மாற்றுவதை ஒரு தர்மமாக, கடமையாக

நினைக்கிறார்கள்? இதற்கான காரணங்கள் என்ன? இதை அலசிப்பார்த்தால் நம்முடைய

பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். இரண்டு காரணங்களால் பிற

மதத்தவர்களை கிறிஸ்த்ஹுவர்களாக மாற்றவேண்டும் என்கிற கட்டாயம், மத ரீதியாக

கிறிஸ்துவ மத ஸ்தபானங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.



முதல் காரணம்:

கிறிஸ்த்துவ மதத்தின் மாற்ற முடியாத அடிப்படையான நம்பிக்கை, கிறிஸ்துவ

மதம் மாத்திரம்தான் உண்மையான் மதம், அது ஒன்றுதான் வழி; மற்ற மதங்கள்

எல்லாம் பொய்; அவை சாத்தானின் சதி - என்பதுதான்.



கிறிஸ்துவ

மதத்தின் மூலமாக மனிதன் மோட்சம் அடைய முடியும். வேறு மதத்தைப்

பின்பற்றுகிறவர்கள் சாத்தானின் கும்பல்கள். அவர்களுடன் உறவோ, பழக்கமோ

கூடாது. மேலும் இந்த ஒரே உண்மையான மதத்தை உலகம் முழுவதும் பரப்ப,

எல்லோரையும் கிறிஸ்துவர்களாக மாற்ற, கிறிஸ்துவ மதம், கிறிஸ்துவப்

பாதிரிகளுக்குக் கட்டளையிடுகிறது. இந்த அடிப்படையான நம்பிக்கையைக் காரணம்

காட்டித்தான் Encyclopaedia of Britannica என்கிற அறிவுக் களஞ்சியமான

தொகுப்பு, கிறிஸ்துவ மதத்தை 'சகிப்புத் தன்மையில்லாத' மதம் என்று

வர்ணிக்கிறது. 'இந்தத் தொகுப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், இது

கிறிஸ்த்ஹுவ அறிஞர்களால் தொகுக்கப்பட்டது. அதனால், இதுபற்றிக் குற்றம்,

குறை கூற முடியாது.ல் உன்னுடைய மதம் மாத்திரம்தான் உண்மை. மற்றதெல்லாம்

பொய் என்கிற நம்பிக்கை, அந்த உண்மையான மதம் எங்கும் பரவ வேண்டுமென்றால்,

பொய்யான மதங்கள் அழியவேண்டும். இந்த அடிப்படையிலே, கிரேக்க, ரோமானிய

மதங்களிலிருந்து சாமானியமான பழங்குடி மதங்கள், ஐரோப்பா வடக்கு அமெரிக்கா,

தெற்கு அமெரிக்கா, அப்பிரிக்கா போன்ற இடங்களில் அடியோடு அழிக்கப்பட்டன.

இந்த அழிவுகள் பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுகளும், புத்தகங்களும் வந்த

வண்ணம் இருக்கின்றன. இதற்குக் காரணம், மற்ற மதங்களெல்லாம் பயனற்ற மதங்கள்

என்பது கிறிஸ்த்ஹுவ போதகர்களின் நம்பிக்கை. (இந்த அழிவுகள் பற்றி மேலும்

விபரங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் Encyclopedia of

Britannica-வின் 4வது தொகுப்பில் பல இடங்களில் குறிப்பாக பக்கங்கள்

491-492ல் காணலாம்.).


.இரண்டாவது காரணம்: கிறிஸ்துவ மதத்தில் மற்றொரு

நம்பிக்கை இயேசு கிறிஸ்து மீண்டும் உலகுக்கு வருவார், வந்து 1000 ஆண்டுகள்

ஆட்சி செய்வார் என்பது. அதன் பிறகு பிரளயம் வரும். அப்போது

புதைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவர்கள் எல்லாம் உயிர் பெற்று வருவார்கள்,

யார் யார் நல்லது செய்திருக்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்திற்கும்

மற்றவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள். (ஆனால் கிறிஸ்துவர்கள்

அல்லாதவர்கள் நல்லது செய்தாலும் நரகத்திற்குத்தான் செல்வார்கள், இது

காந்திக்கும் பொருந்தும்.) ஆனால் இவ்வளவும் நடக்க, இயேசு கிறிஸ்த்ஹு

உலகிற்கு திரும்பவும் வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யவேண்டும்.

(இதைத்தான் Millennium என்று கூறுகிறார்கள்.)



ஆனால் இயேசு எப்போது

திரும்ப வருவார்? எப்போது உலகம் முழுவதும் பரவி கிறிஸ்துவ மதம் மாத்திரம்

நிலவுகிறதோ அப்போதுதான் திரும்ப வருவார். சாத்தான் நம்பிக்கைகள் உலகின்

எந்தப் பாகத்திலிருந்தாலும் அவை இருக்கும் வரையில் இயேசு கிறிஸ்து திரும்ப

வரமாட்டார் என்பதுதான் அந்த நம்பிக்கை. இந்த நம்பிக்கையை Eschatological

expectation என்று கிறிஸ்துவ மறையில் கூறுவார்கள். இப்போது புரிகிறதா

மதமாற்றம் செய்வதில் கிறிஸ்துவ ஸ்தாபனங்களும் பாதிரிகளும் ஏன்

புரியாததொரு வேகங்காட்டுகிறார்கள் என்று? இயேசுவை உயிருடன்

பார்க்கவேண்டுமென்கிற ஆவல், மற்ற மதத்தவர்கள் எல்லோரையும்

கிறிஸ்துவர்களாக மாற்ற வேண்டும் என்கிற கட்டாயமாக மாறி, அதுவே மதமாற்ற

வெறியாக உருவெடுக்கிறது.



இந்த Eschatological நம்பிக்கை, கிறிஸ்துவ

மதத்தை, மதமாற்றத்தின் மூலமாக, காட்டுத் தீ போல உலகில் எப்படி பரவ

வைத்தது என்பது, அதே Encyclopaediaவில் விவரமாக எழுதப்பட்டுள்ளது.

சொல்லப்போனால் மற்ற மதங்கள் எல்லாம் இயேசு உலகில் வருவதற்குத்

தடங்கல்கள் என்கிறா Eschatological நம்பிக்கைதான் கட்டாய மதமாற்றத்திற்கு

உந்துதலாக இருக்கிறது. எப்படி இந்த Eschatological நம்பிக்கை, வெறியாக

மாறி, கிறிஸ்துவ மதம் பரவ உதவியிருக்கிறது என்பதைக் காட்ட Encyclopaedia

தொகுப்பில் கூறப்பட்டுள்ள சரித்திர பூர்வமான ஒரு நிகழ்ச்சியை - அதுவும்

நம் நாடு சம்பந்தப்பட்டது - இங்கு நினைவு கூரலாம் என நினைக்கிறேன்.



கொலம்பஸ்

அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று வெள்ளைக்காரர்கள் நமக்கு எழுதி

வைத்ததை, இதுவரை வரலாற்றுப் புத்தகத்தில் நாம்படித்து வருகிறோம். ஆனால்,

கொலம்பஸ் அமெரிக்காவைத் தேடிப் போகவில்லை. கப்பலில் ஏறிய அவர் பாரத

நாட்டுக்குச் செல்லவேண்டுமென்றுதான் புறப்பட்டார். ஏன் அவர் பாரத

நாட்டுக்குப் புறப்பட்டார்? இயேசு கிறிஸ்து உலகுக்கு மறுபடியும் வரவேண்டிய

தருணம் வந்துவிட்டதாக கொலம்பஸ் நம்பினார். ஆனால் ஒரு தடங்கல் இருப்பதால்,

இயேசு வரமுடியவில்லை என்றும வர் நம்பினார். அது என்ன தடங்கல்? பாரத

நாட்டில் சாத்தான் (ஹிந்து மதம்) குடி கொண்டு, இயேசு வருகையைத் தடுத்துக்

கொண்டிருக்கிறது என்பதுதான். அதனால் எப்படியாவது (வாஸ்கோடகாமா சென்ற

நீண்ட வழியில் செல்ல நேரமில்லாததால்) ஒரு குறுக்கு வழியில் பாரத தேசம்

சென்று, இயேசு வருவதற்கு தடங்கலாக இருக்கிற சாதாரண ஹிந்து மதத்தை,

கிறிஸ்துவ வழிமுறைகளால் விலக்கிவிடவேண்டும் என்கிற வெறியிலேதான், அவர்

பாரதநாடு செல்லக் கீளம்பி, அமெரிக்காவில் போய் இறங்கினார். (இது

பற்றிEncyclopacdia-வில் தொகுப்பு 4-இல் பக்கம் 504-இல்

குறிப்பிடப்பட்டுள்ளது.)



அதையே இந்தியா என்று நம்பி, அங்கிருக்கும்

மக்களை இந்தியர்கள் என்று நினைத்து, அவர்களை மிருகங்களை வேட்டையாடுவது

போல தீர்த்துக்கட்டினார். அப்போது கிறிஸ்துவ நிறுவனங்கள் இந்த

வழிமுறையைக் கையாண்டனர். அவர் துவக்கி வைத்த இந்தப் பணி 2 நூற்றாண்டுகளிலே

பூர்த்தியடைந்து வடக்கு, தெற்கு அமெரிக்காவிலிருந்தே, பழங்குடியினர்

முழுமையாக தீர்த்துக்கட்டப்பட்டனர். கிட்டத்தட்ட 11கோடி பேரிலிருந்து

20கோடி பேர் வரை தீர்த்துக் கட்டப்பட்டிருக்கலாம் என்பது இப்போதைய

கணிப்புகள். மயன் கலாச்சாரம், செவ்விந்தியர்கள் கலாச்சாரம் எல்லாம் இன்று

உயிருடன் இல்லை. அவைகளை மியூஸியத்தில்தான் பார்க்க வேண்டும்..

.இது போன்ற ஒரு கொடுமை உலக வரலாற்றிலேயே நடந்தது

கிடையாது. கி.பி 1500-ஆம் ஆண்டு அந்த பழங்குடியினரின் எண்ணிக்கை 13.5

கோடி என்று கணிக்கப்பட்டது - கிட்டத்தட்ட அன்றைய பாரதத்தின் (பாகிஸ்தான்,

வங்காளதேசம் உட்பட) ஜனத்தொகையும் அந்த அளவுதான். நாம் இப்போது

கிட்டத்தட்ட 125கோடி. ஆனால் அமெரிக்கப் பழங்குடியினரின் எண்ணிக்கை

50,000-க்குக் கீழே. அதாவது 125கோடியாகி இருக்க வேண்டியவர்கள், இப்போது

50,000 பேர் மட்டும்தான் உள்ளனர். இந்த விவரங்கள் American Indiao

Holocaust and Survival என்கிற புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. ஆனாலும் இதை

அதிகம் பேருக்குத் தெரியாமலேயே மறைத்து வைத்திருந்தார்கள்.



அமெரிக்காவில்

செப்டம்பர் 11, 2001-அன்று நடந்த பயங்கரத்தைப் பற்றி கிளின்டன் அவர்கள்

பேசும்போது, "நாம் முன்னால் செய்த கொடுமையின் கர்மம்தான் நம்மைத்

தாக்குகிறது போல இருக்கிறது." என்று கூறினார். இந்தக் கொடுமைக்கெல்லாம்

அடிப்படையான காரணம், கிறிஸ்துவ நம்பிக்கையில் மற்ற மதங்கள் தேவையற்றவை,

சாத்தானின் விஷமங்கள் என்பது மாத்திரம் இல்லாமல்-அவை இயேசுவின்

வருகைக்குத் தடங்கல்கள் என்ற தீவிர நம்பிக்கைதான். மதமாற்றத்தின்

அடிப்படைக் காரணமும் இதுதான்.



இந்த தீவிரமான நம்பிக்கை ஏதோ 400

ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கும் தவறான எண்ணம்; அது இப்போது இல்லை:

என்று நினைக்க வேண்டாம். 20-ஆம் நூற்றாண்டிலே கூட இதே தீவிரமான

நம்பிக்கைதான் கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் பலவற்றையும் உந்துகிறது - என்று

கூறுகிறது. Encyclopacdia தொகுப்பு (P-504, Vol-iv).

இதை

வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - என்ன

செய்தும் மதம் மாற்றலாம், தவறு இல்லை. ஏனென்றால் மற்ற மதங்கள் எல்லாம்

சாத்தான் மதங்கள்தானே; அதற்கு இந்தச் சட்டம் தடங்கல். இதுது¡ன் உண்மையான

காரணம்- ஜெயலலிதா கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்ப்பதற்கு! மதச்சார்பற்ற

தலைவர்களும், கட்சிகளும் இந்த உண்மைகளை வெளிவர விடமாட்டார்கள். ஆனால்

வெளிவராத குற்றத்தினால் உண்மையை மறைக்க முடியாது.



அடுத்ததாக மதமாற்றம் செய்ய என்னென்ன மாதிரியான உத்திகளை, கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் கையாளுகின்றன என்று பார்ப்போம்.



இது வியாபார தந்திரம்தானே



ஆன்மீக

விஷயமான மத நம்பிக்கையில், எப்படி சந்தை கலாச்சாரம் வந்து சேர்ந்தது? இதை

சிறிது விளக்கமாகவே பார்க்க வேண்டும். மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை

எப்படியாவது மதம் மாற்றி தன் மதத்தில் சேர்த்து விட வேண்டும்- என்று மதம்

மாற்றுவதைய தர்மமாக ஒரு மதம் கொண்டால், அந்த மதம் மற்றும் அந்த மதத்தை

சார்ந்த ஸ்தாபனங்கள் எப்படி நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்துவரும்

ஆன்மீக கலாசார முறையிலிந்து மாறுபட்டு இருக்கும். இயங்கும் என்று

பார்ப்போம்.



முதலில் மதம் மாற்றுவதே அந்த மதத்தின் தொழிலாக

மாறும். அதிலிருந்து ஆன்மீகம் மறையும். பிறது அந்த தொழிலுக்கான குணங்கள்

வழி, விதி முறைகள், அமைப்புகள் பயிற்சிகள், பயிற்சி பெற்ற ஊழியர்கள்,

பிரசுரங்கள் மற்ற மதத்தைப் பற்றிய இழிவான எண்ணத்தை தங்கள் மனதிலும்,

தங்களுடைய மத்தை சேர்ந்தவர்களின் மனதிலும் ஏற்படுத்துவது; இது போன்ற

பெரிய திட்டத்திற்கான பணம், நெருக்கம், பணப்புழக்கம்... இப்படியெல்லாம்

பிரம்மாண்டமான போட்டி தயாரிப்புகள் எல்லாமே, இந்த மதத்தின் ஆத்மாவிலும்

வழிமுறைகளிலும் புகுந்து விடுகிறது. இப்படித்தான் மதம் என்பது வியாபார

பொருளாகிறது. மத ஸ்தாபனங்கள், வியாபார ஸ்தாபனங்கள் ஆகின்றன.



சந்தையில்

வியாபாரிகளுக்கிடையே எப்படி பொறாமை, போட்டி, சதி, ஒருவர் மற்றவரை குறை

சொல்வது மற்றவர்களின் பொருள் பற்றி இழிவாகப் பேசுவது என்பவை சர்வ

சாதாரணமாக ஆகிறதோ, அதேபோல் மதங்களுக்கிடையே அதீத உறவு முறைகள்

பரவுகின்றன. ஒரு மதம் இந்த சந்தை கலாச்சாரத்தை கண்டு பிடித்தால், மற்ற

மதங்களும் அதையே செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. ஒரு துளி விஷம்

கலந்தால் எப்படி ஒரு குடம் பாலும் விஷமாகிறதோ, அதுபோல ஒரு மதம் சந்தை

கலாச்சாரத்தை கடைபிடித்தால், அந்த விஷம் எல்லா மதங்களுக்கும் பரவுகிறது.



பின்னர்,

வியாபாரிகள் எப்படி பிறருடைய வாடிக்கைக்காரர்களைத் தம்மிடம் இழுப்பது

என்பது பற்றியே சிந்தித்து, அதற்கான விதிமுறைகளை, விளம்பரங்களை

கையாள்கிறார்களோ அதேபோல் மத ஸ்தாபனங்கள் தங்களுடைய மதத்திற்கு மக்களை

ஈர்க்கவும், வந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், என்ன வேண்டுமானாலும்

செய்யலாம் என்றும் - அதற்காக எது செய்தாலும் அது தர்மமே என்றும் - அந்த

வியாபார முறைகளை எல்லாம் மதத்தின் தார்மீக முறைகளாக அங்கீகரித்து

அனுசரிக்கின்றனர்..

.இதனால்தான் மதங்கள் வியாபாரம் போல சந்தை

கலாசாரத்திற்கு ஆளாகின்றன. விளைவு மதமாற்றம். மதம் (அல்லது கடவுளே கூட)

வியாபார பொருளாக ஆகிவிடுகின்றது. அதாவது மதத்தைவிட மதமாற்றம்

முக்கியமாகிவிடுகின்றது. மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளைவிட, அதனால்

ஏற்படவேண்டிய குணங்களை விட, ஏன் ஆன்மீகத்தின் வளர்ச்சியைவிட, நம் மதத்தில்

எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது, அதாவது ஆன்மீகத்தைவிட எத்தனை தலைகள்

என்கிற எண்ணிக்கைதான் முக்கியமாகி விடுகிறது.



மற்ற மதங்களைப்

பற்றித் தவறான, தாழ்வான எண்ணம் இல்லாமல், அப்படிப்பட்ட எண்ணங்களைத்

தன்னுடைய அமைப்பைச் சார்ந்தரவர்கள் மனதில் உருவாக்காமல், மந்தையாகவோ

அல்லது மற்ற பெரிய அளவிலோ மதம் மாற்றுவது என்பது இயலாத காரியம். அதாவது

எல்லா மதங்களும் சமமே என்று நினைக்கும் எந்த மதமும், மதம் மாற்றுதலில்

ஈடுபடாது. என்னுடைய மதம் உயர்ந்த மதம் என்று நினைப்பது தவறல்ல. ஆனால்

மற்றவர்கள் மதம் காட்டுமிராண்டு மதம், அதை எப்படியாவது தீர்த்துக் கட்ட

வேண்டும் என்று நினைப்பதிலேதான் தீவிரவாதம் வளருகிறது; வன்முறை பிறக்கிறது.



மேலும்,

பிற மதங்களிலிருந்து எப்படி ஆள் பிடிப்பது, அவர்களை எப்படித் தன்

மதத்திற்குக் கொண்டுவருவது என்பன போன்ற நடவடிக்கையெல்லாம், மதத்தை

வியாபாரமாக்குவது மட்டுமல்லாமல், அரசியலாக்கவும் செய்கிறது! ஆள்

சேர்பதற்கு அரசியல் கட்சிகள் என்ன செய்கின்ற்னவோ, அதையே மதங்களும்

செய்யவேண்டி வருகிறது. இப்படித்தான் தெய்வங்கள், மார்க்கெட்டிற்கு,

சந்தைக்கு இழுக்கப்படுகிறார்கள். இதைத்தான் தன் சட்டத்திற்கு ஆதரவாகப்

பேசும்போது ஜெயலலிதாவும் குறிப்பிட்டிருக்கிறார்.



மதம் மாறுவது தவறு!



எப்படியாவது

மற்றவரை மதம் மாற்றிவிடவேண்டும் என்கிறா வெறி ஒரு பக்கம் இருக்க மதம்

மாறுவது, மதம் மாற்றுவது பற்றி ஹிந்து தர்மத்தின் நிலை என்ன? கிறிஸ்துவ

மதத்திற்கும், ஹிந்து தர்மம் அது சார்ந்த மற்ற மதங்களுக்கும் எதிர்மாறான

நிலைகள். ஹிந்து மதத்தின் புராதனமான நிலையை சிருங்கேரி சங்கராச்சாரியராக

இருந்த சந்திரசேகர பாரதி (இப்போதைய மகா சன்னிதானத்தின் குருவின் குரு)

அவர்களுக்கும், கிறிஸ்துவரான ஒரு வெள்ளைக்காரருக்கும் நடந்த சம்பாஷணை

மூலம் அறியலாம்.



அந்த கிறிஸ்துவர், தான் ஹிந்துவாக மாறவேண்டும்

என்று விரும்பி சங்கராச்சாரியை வழிகேட்டபோது, சந்திரசேகர பாரதி கூறியது

(சுருக்கமாக) இதுதான். "நீங்கள் உங்கள் மதத்திலிருந்து மாறவேண்டும் என்று

நினைப்பதே தவறு. உங்கள் மதத்திலிருந்து கொண்டே, அந்த நம்பிக்கையைப்

பின்பற்றியே, ஹிந்து மதத்தின் மூலமாக எந்த நிலையை அடையவேண்டும் என்று

நினைக்கிறீர்களோ அதை அடைய முடியும்" என்று கூறி, அவரை கிறிஸ்துவராகவே

இருக்கும்படி வேண்டினார் சங்கராச்சாரியார். அதாவது மதம் மாறுவதே தவறு

என்று நினைக்கும் ஒரு மதம், அதில் மதமாற்றம் என்னும் பேச்சுக்கே இடமில்லை;

ஆனால் மறுபுறமோ மதமாற்றத்தையே கடமையாக்கிக் கொண்டுள்ள ஒரு மதம்.

இதனால்தான் ஹிந்து ஸ்தாபனங்கள் கட்டாய மதமாற்றத் தடையை வரவேற்கின்றன;

கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் எதிர்க்கின்றன.



இப்போது ஹிந்துவாக மதம்

மாறுவது என்பதெல்லாம் ஹிந்து ஸ்தானங்கள் தற்காப்பு நடவடிக்கையாகச்

செய்கின்றனவே தவிர, மற்ற மதத்தை அங்கீகரிக்கும் எந்த ம்தமும், மற்ற மதத்தை

மதிக்கும் எந்த மதமும், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடவே முடியாது.

மதமாற்றுவதை மத நம்பிக்கையாகக் கொண்டால் அது மதவெறியாகிறது. கிறிஸ்துவ மத

ஸ்தானங்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலை இதுதான்..
.